| ADDED : ஆக 13, 2024 06:34 AM
சங்கராபுரம்: சங்கராபுரம் நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடந்தது.சங்கராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில், சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் ஆனந்த் வெங்க டேஷ், சவுந்தர் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.முன்னதாக வழக்கு விசாரணை, நிலுவையில் உள்ள கோப்பு களை பார்வையிட்டனர். .மாவட்ட உரிமையியல் நீதிபதி முல்லைவாணன், வழக்கறிஞர் சங்க தலைவர் ரவி, செயலாளர் ராமசாமி, பொருளாளர் பரமசிவம், அரசு வழக்கறிஞர் அண்ணாமலை, சட்ட பணிகுழு திருநாவுக் கரசு, முன்னாள் அரசு வழக்கறிஞர் தாமரைச் செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர்.