உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சகோதரர்களுக்குள் மோதல்; 8 பேர் மீது வழக்குப் பதிவு

சகோதரர்களுக்குள் மோதல்; 8 பேர் மீது வழக்குப் பதிவு

ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் அருகே சகோதரர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.ரிஷிவந்தியம் அடுத்த காட்டுசெல்லுார் பகுதியைச் சேர்ந்தவர் ரகுபதி, 52; இவரது தம்பி ஏழுமலை, 47; இருவருக்கும் சொத்து தொடர்பாக முன்விரோதம் இருந்தது. கடந்த 22ம் தேதி இவர்களது தந்தை சுப்ரமணியன் உடல் நலமின்றி இறந்தார்.ஏழுமலை வீட்டிலிருந்த சுப்ரமணியனின் உடலைப் பார்க்க ரகுபதி மற்றும் அவரது குடும்பத்தினர் சென்ற னர். அங்கு இரு குடும்பத்திற்குமிடையே தகராறு ஏற் பட்டு தாக்கிக் கொண்டனர்.இதுகுறித்து இரு தரப்பு புகாரின் பேரில் ஏழுமலை, இவரது மனைவி ராஜவேணி, மகன்கள் கார்த்திகேயன், கதிரவன், ரகுபதி, இவரது மகன்கள் செல்வம், அய்யனார், மனைவி ஜெயா ஆகிய 8 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை