உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  தாய், மகள் மாயம் போலீஸ் விசாரணை

 தாய், மகள் மாயம் போலீஸ் விசாரணை

கள்ளக்குறிச்சி: ஆந்திரா மாநிலம், மேல்திருப்பதியைச் சேர்ந்தவர் வினோத்சிங் மனைவி யுவரேக்கபாய், 30; இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து யுவரேக்கபாய் தனது பிள்ளைகளுடன் கள்ளக்குறிச்சியில் கோட்டைமேடு பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 19ம் தேதி தாய் யசோதாபாய்க்கும், மகள் யுவரேக்கபாய்க்கும் இடையே தகராறு ஏற்பட்டது.இதனால் ஆத்திரமடைந்த யுவரேக்கபாய் தனது மகள் கேசிகாவுடன் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது சகோதரர் லோகனந்சிங், அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை