உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / திருவள்ளூர் மாவட்ட செஸ் போட்டி 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

திருவள்ளூர் மாவட்ட செஸ் போட்டி 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

சென்னை, : திருவள்ளூர் மாவட்ட சதுரங்க சங்கத்தின் வெள்ளி விழாவை முன்னிட்டு, மாவட்ட அளவிலான செஸ் போட்டி, பூந்தமல்லியில் உள்ள பிரதியுஷா பொறியியல் கல்லுாரியில் நடந்தது.இதில், ஏழு வயது முதல் 17 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ - மாணவியருக்கு, தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன.போட்டியில், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த, 500க்கும் மேற்பட்டோர் உற்சாகமாக பங்கேற்றனர். முதல் நாளில், நான்கு சுற்றுகள், இரண்டாவது நாளில் மூன்று சுற்றுகள் என, மொத்தம் ஏழு சுற்றுகள் நடந்தன. தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டத்தின் கிராண்ட் மாஸ்டர்களான பிரக்ஞானந்தா, குகேஷ், கார்த்திகேயன் முரளி, வைஷாலி மற்றும் வர்ஷினி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, உலக சதுரங்க வீரர் கார்த்திகேயன் முரளி பரிசுகளை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை