உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பயணியர் நிழற்கூடம் அருகே பஸ்களை நிறுத்த வேண்டுகோள்

பயணியர் நிழற்கூடம் அருகே பஸ்களை நிறுத்த வேண்டுகோள்

அரவக்குறிச்சி: கரூர் மாவட்டம், நொய்யல் குறுக்கு பிரிவு சாலையில் பயணியர் நிழற்கூடம் கட்டப்பட்டுள்ளது. இந்த நிழற்கூடம் அருகே பஸ்களை நிறுத்தாமல், ஈரோடு, கரூர் செல்லும் நெடுஞ்சாலை ஓரத்தில் நிறுத்தி செல்கின்றனர். இதனால், அங்கு சென்று பொதுமக்கள் பஸ்சில் ஏறி பயணம் செய்கின்றனர். இதன் காரணமாக காலியாக உள்ள நிழற்கூடத்தில் மது பிரியர்கள் அமர்ந்து மது குடித்துவிட்டு பாட்டில்களை உடைத்து செல்கின்றனர். மேலும், இரவு நேரத்தில் சமூக விரோதிகளின் கூடாரமாக காணப்படுகிறது.சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, பயணிகள் நிழற்கூடம் அருகே அனைத்து பஸ்களையும் நிறுத்தி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை