| ADDED : டிச 29, 2025 07:35 AM
கரூர்: கரூரில், பசுபதீஸ்வரா ஐயப்பா சேவா சங்கத்தின், 39வது ஆண்டு விழா கொடியேற்றத்துடன், 25ல் துவங்கியது. 26ல் அமராவதி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடம் புறப்பாடு, ஐயப்பனுக்கு அபிஷேகம், ஏகதின லட்சார்ச்சனை குத்துவிளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து, 25ம் ஆண்டாக சீதா கல்-யாண உற்சவம் நிகழ்ச்சி, கும்பகோணம் ஸ்ரீப-லராம் பாகவதர் குழுவினர், நேற்று நடத்தி வைத்-தனர். நேற்று காலை, சீதா கல்யாண மாப்பிள்ளை அழைப்பு, காசியாத்திரை, சீர் கொண்டு வருதல், கன்னிகா தானம் என, வரிசையாக திருமண விசேஷங்கள் நடந்தன.திருக்கல்யாணத்துக்கு பின், ராமர் சீதா நாமாவளி பஜனை நடந்தது. நிகழ்ச்சியில், கரூர் சுற்றுவட்-டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், பெண்கள், குழந்தைகள் கலந்துகொண்டு, ஸ்ரீரா-மனின் புகழை பாடி பரவசமடைந்தனர். பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு, 7:00 மணி அளவில் சீதா, ராமர் திருவீதி உலாவும் நடந்தது.