உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பண்டரிநாதன் கோவிலில் நாளை சொர்க்க வாசல் திறப்பு

பண்டரிநாதன் கோவிலில் நாளை சொர்க்க வாசல் திறப்பு

கரூர்: கரூர் ஜவஹர் பஜார் பண்டரிநாதன் கோவிலில், நாளை சொர்க்கவாசல் திறப்பு விழா நடக்கிறது.வைகுண்ட ஏகாதசியையொட்டி, பிரசித்தி பெற்ற பண்டரிநாதன் கோவிலில், கடந்த, 20 முதல் பகல் பத்து உற்சவம் நாள்தோறும் மாலை நடந்து வருகிறது. இன்று இரவு, 7:00 மணிக்கு கோவிலில் மோகினி அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை நடக்கிறது. அதை தொடர்ந்து, நாளை காலை, 4:00 மணி முதல், 5:00 மணிவரை கோவிலில், சொர்க்க வாசல் திறப்பு விழா நடக்கிறது. பிறகு, உற்சவ பெருமாள் சுவாமி திருவீதி உலாவும், ராப்பத்து உற்சவம் தொடங்குகிறது. ஏற்பாடுகளை, பண்ட-ரிநாதன் பஜனை மடம் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை