மேலும் செய்திகள்
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்
19 hour(s) ago
ரூ.60 லட்சத்தில் தார்ச்சாலை பணி
19 hour(s) ago
அரசு பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்
19 hour(s) ago
தளி, கெலமங்கலத்தில் 18 பஞ்., பிரிப்பு
19 hour(s) ago
கிருஷ்ணகிரி: சுதந்திர தினத்தன்று, தொழிலாளர்ளுக்கு விடுமுறை அளிக்காத, 58 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து கிருஷ்ணகிரி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மாதேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு தேசிய பண்டிகை விடுமுறை சட்டம், உணவு நிறுவன சட்டம் மற்றும் மோட்டார் போக்குவரத்து தொழிலாளர் சட்டம் மற்றும் விதிகளின்படி, தேசிய விடுமுறை தினமான சுதந்திர தினத்தன்று, கடைகள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, சம்பளத்துடன் கூடிய ஒரு நாள் விடுமுறை வழங்க வேண்டும். அவ்வாறு விடுமுறை அளிக்காத பட்சத்தில் அன்றைய தினம் பணிக்கு அமர்த்தப்படும் தொழிலாளர்களுக்கு, இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுப்பு அனுமதித்து, சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு அறிவித்து, அதன் நகலை தொழிலாளர் துணை, உதவி ஆய்வாளர்களுக்கு அனுப்பி, விடுமுறை தினத்தன்று நிறுவனத்தில் பார்வையில் படும்படி வைக்க வேண்டும். நேற்று சுதந்திர தினத்தன்று, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மாதேஸ்வரன் தலைமையில், 36 கடைகள், 30 உணவு நிறுவனங்கள் மற்றும், 9 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம், 75 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டு, சட்ட விதிமுறைகளை பின்பற்றாத, 26 கடைகள், 26 உணவு நிறுவனங்கள் மற்றும், 6 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம்,58 நிறுவனங்களின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை தொடரப்பட்டுள்ளது. இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago