உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அலட்சியமாக பஸ் ஓட்டிய டிரைவர் கைது

அலட்சியமாக பஸ் ஓட்டிய டிரைவர் கைது

கிருஷ்ணகிரி: பர்கூர் அடுத்த கப்பல்வாடியை சேர்ந்தவர் தேவகி, 60. இவர் கடந்த, 13ல், சொந்த வேலையாக கிருஷ்ணகிரி வந்தார். பணி முடிந்து அன்று மாலை கிருஷ்ணகிரியில் இருந்து பர்கூர் செல்லும் அரசு டவுன் பஸ்சில் ஏறியுள்ளார். பழையபேட்டையிலிருந்து ஐந்துரோடு செல்லும் சாலையில் சென்ற போது, பஸ்சை டிரைவர் அலட்சியமாக ஓட்டியதால், தேவகி பஸ்சிலிருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.இது குறித்து, அவர் அளித்த புகார் படி, கிருஷ்ணகிரி டவுன் போலீசார், பஸ்சை அலட்சியமாக ஓட்டிய, சுபேதார்மேட்டை சேர்ந்த பஸ் டிரைவர் பிரான்சிஸ், 59, என்பவரை கைது செய்-தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை