உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தனியார் ஊழியரிடம் ரூ.12.98 லட்சம் மோசடி

தனியார் ஊழியரிடம் ரூ.12.98 லட்சம் மோசடி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த குண்டுகுறுக்கியை சேர்ந்தவர் சந்திரன், 48, தனியார் நிறுவன ஊழியர்; இவரது மொபைல் எண்ணிற்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில், தாங்கள் அனுப்பும் கம்பெனிகளுக்கான பங்கு சந்தையில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் எனக்கூறி சில 'லிங்க்' இருந்தது.அதில் சிறிது முதலீடு செய்த சந்திரனுக்கு, கூடுதலாக பணம் கிடைத்தது. இதனால், 12.98 லட்சம் ரூபாயை அவர்கள் கூறிய வங்கி கணக்குகளுக்கு அனுப்பினார். அதன்பின் எந்த பணமும் வரவில்லை. அவரை தொடர்பு கொண்ட எண்கள் அனைத்தும் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டன. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சந்திரன், கிருஷ்ணகிரி சைபர் கிரைமில் அளித்த புகாரின்படி, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை