உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓய்வூதியதாரர்கள் வீட்டிலிருந்தே உயிர்வாழ் சான்றிதழ் பெறலாம்

ஓய்வூதியதாரர்கள் வீட்டிலிருந்தே உயிர்வாழ் சான்றிதழ் பெறலாம்

கிருஷ்ணகிரி :கிருஷ்ணகிரி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் பார்த்திபன் வெளியிட்டுள்ள அறிக்கை:ஓய்வூதியதாரர்கள் நவ., 1 முதல் தங்கள் உயிர் வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கும்படி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரர்கள் வீட்டிலிருந்தபடியே, டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை தபால்காரர்கள் மூலம் சமர்ப்பிக்கலாம். அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், 'இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி' மூலம் ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தபடியே, தபால்காரர்கள் மூலம் பயோமெட்ரிக் அல்லது 'பேஸ் ஆர்.டி., ஆப்' முறையை பயன்படுத்தி, டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு சேவை கட்டணமாக, 70 ரூபாய் தபால்காரரிடம் செலுத்த வேண்டும். ஓய்வூதியதாரர்கள், தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார் எண், மொபைல் எண், பி.பி.ஓ., எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விபரங்களை தெரிவித்து, ரேகை பதிவு செய்தால், ஒரு சில நிமிடங்களில் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழுக்கு சமர்ப்பிக்கலாம். சான்றிதழ் சேவை பெறலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !