உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ரூ.1.14 லட்சம் மதிப்பிலான 3 சக்கர சைக்கிள் வழங்கல்

ரூ.1.14 லட்சம் மதிப்பிலான 3 சக்கர சைக்கிள் வழங்கல்

கிருஷ்ணகிரி, : கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்து, பல்வேறு கோரிக்கைகளுடன் பொதுமக்கள் வழங்கிய, 402 மனுக்களை பெற்றுக்கொண்டார். அதில், தகுதியான மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 10 பேருக்கு, 1.14 லட்சம் ரூபாய் மதிப்பில் மூன்று சக்கர சைக்கிள்கள், தேசிய நுாலக வாரவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழை, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வழங்கினார்.இதில், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோபு மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை