உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ப.வேலுாரில் பூக்கள் விலை சரிவு

ப.வேலுாரில் பூக்கள் விலை சரிவு

ப.வேலுார் : ப.வேலுார் பகுதியில் உள்ள சாணார்பாளையம், ப.வேலுார், பர-மத்தி, மோகனுார், உன்னியூர், கரூர் மாவட்டம் சேமங்கி, வேட்ட-மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் குண்டுமல்லி, முல்லை, சம்-பங்கி, சாமந்தி, அரளி உள்ளிட்ட பூக்கள் சாகுபடி செய்யப்படு-கின்றன. இவற்றை விவசாயிகள் அறுவடை செய்து, ப.வேலுாரில் உள்ள பூ உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கு தினமும் கொண்டு வந்து ஏலத்தில் விற்பனை செய்கின்றனர். சில வாரங்க-ளாக பூக்கள் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. தற்-போது, பூக்கள் விளைச்சல் அதிகரித்துள்ளதால், ப.வேலுாரில் உள்ள பூ உற்பத்தியாளர் சங்கத்திற்கு, நேற்று பூக்கள் வரத்து அதி-கரித்தது.இதனால், கடந்த வாரம், 320 ரூபாய்க்கு விற்ற ஒருகிலோ குண்டு-மல்லி, நேற்று 280 ரூபாய்க்கும், 100 ரூபாய்க்கு விற்ற சம்பங்கி, 60 ரூபாய்க்கும், 150 ரூபாய்க்கு விற்ற அரளி, 120 ரூபாய்க்கும், 200 ரூபாய்க்கு விற்ற சாமந்தி, 100 ரூபாய்க்கும், 340 ரூபாய்க்கு விற்ற முல்லை, 260 ரூபாய்க்கும் விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை