உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஆடுகள் வரத்து குறைவால் ரூ.30 லட்சத்திற்கு விற்பனை

ஆடுகள் வரத்து குறைவால் ரூ.30 லட்சத்திற்கு விற்பனை

எருமப்பட்டி, எருமப்பட்டி யூனியன், பவித்திரத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை ஆட்டுச்சந்தை நடக்கிறது. இந்த சந்தைக்கு முட்டாஞ்செட்டி, புதுார், கஸ்துாரிப்பட்டி, எருமப்பட்டி, நவலடிப்பட்டி உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.தற்போது, பவித்திரம் ஆட்டுச்சந்தைக்கு ஆடுகள் வரத்து நாளுக்கு நாள் குறைவதால், வெளியூரில் இருந்து வரும் வியாபாரிகளின் வரத்தும் குறைந்து வருகிறது. பரபரப்பாக காணப்படும் இந்த சந்தைக்கு, நேற்று மிக குறைவான ஆடுகளே விற்பனைக்கு வந்ததால், வெளியூர் வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனர். இதனால், 30 லட்சம் ரூபாய்க்கு மட்டுமே வியாபாரம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை