உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரூ.6.64 லட்சத்தில் நலத்திட்ட உதவி

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரூ.6.64 லட்சத்தில் நலத்திட்ட உதவி

நாமக்கல், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. டி.ஆர்.ஓ., சரவணன் தலைமை வகித்தார். கூட்டத்தில், முதியோர், விதவை மற்றும் கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் மற்றும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி, பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம், 538 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றை பெற்றுக்கொண்ட டி.ஆர்.ஓ., பரிசீலனை செய்து, உரிய அலுவலர்களிடம் வழங்கி, 'மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என உத்தரவிட்டார்.தொடர்ந்து, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில், ஆறு பேருக்கு, தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம், ஆறு லட்சம் ரூபாய் மதிப்பில், தொழில் முறை டாக்சி வாகனம் மற்றும் ஆட்டோ மானியம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 11 பேருக்கு, 63,801 ரூபாய் மதிப்பில் காதொலி கருவி, மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் என, 17 பேருக்கு, 6.64 லட்சம் ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தனித்துணை கலெக்டர் சுந்தரராஜன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கலைச்செல்வி, துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை