| ADDED : ஆக 15, 2024 11:15 PM
கூடலுார் : முதுமலையில் சுதந்திர தின விழாவுடன், வளர்ப்பு யானை சந்தோஷின் பிறந்த நாளையும், வனத்துறையினர் கேக் வெட்டி கொண்டாடினர்.நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு மற்றும் அபயாரண்யம் யானைகள் முகாமில், 29 வளர்ப்பு யானைகளை பராமரித்து வருகின்றனர். இந்த முகாமில் மறைந்த ருக்கு என்ற வளர்ப்பு யானைக்கு, 1971 ஆக., 15ல் பிறந்த சந்தோஷ் என்ற யானைக்கு நேற்று, 53வது பிறந்தநாள் ஆகும்.நேற்று காலை, முகாமில் நடந்த சுதந்திர தின விழாவை தொடர்ந்து, வனத்துறை சார்பில் வளர்ப்பு யானை சந்தோஷத்துக்கு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.இதற்காக, யானை விரும்பி உண்ணக் கூடிய கேழ்வரகுடன், தேங்காய் இனிப்பு சேர்த்து செய்யப்பட்ட கேக்கை, பாகன் மாறன், வனக் காப்பாளர் கோபால் ஆகியோர் வெட்டினர். தொடர்ந்து, முதுமலை துணை இயக்குனர் (பொ) வெங்கடேஷ் பிரபு, யானைக்கு கேக் ஊட்டினார்.பாகன்கள் கூறுகையில்,'சுதந்திர தினத்தில் பிறந்த, வளர்ப்பு யானை சந்தோஷ் பிறந்த நாளை சுதந்திர தின நிகழ்ச்சியில் கேக் வெட்டி கொண்டாடியது மறக்க முடியாத நிகழ்வாகும்,' என்றனர்.