உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தொழிலாளி கொலை; உறவினர் கைது

தொழிலாளி கொலை; உறவினர் கைது

சேலம்: சேலம், திருவாக்கவுண்டனுார், புத்தர் தெருவை சேர்ந்தவர் குமார், 50. இவருக்கு அதே பகுதியில் பூர்வீக நிலம் உள்ளது. அப்பகுதியை சேர்ந்த குமாரின் உறவினர் கோபால், 40. இவ-ருக்கும், குமாருக்கும் இடையே நேற்று முன்தினம் நிலம் தொடர்-பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கோபால், கட்டையால் குமார் தலையில் தாக்கியுள்ளார். அதில் காயம் அடைந்த குமாரை, மக்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவம-னையில் சேர்த்தனர். இதையடுத்து சூரமங்கலம் போலீசார், கோபாலை கைது செய்தனர். இந்நிலையில் குமார் நேற்று உயிரிழந்தார். இதனால் அடிதடி வழக்கை, கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரிக்-கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ