உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  கார் மோதி எலக்ட்ரீசியன் பலி

 கார் மோதி எலக்ட்ரீசியன் பலி

திருப்புவனம்: திருப்புவனம் அருகே டி.பாப்பான்குளம் விலக்கில் டூவீலர் மீது கார் மோதியதில் எலக்ட்ரீசியன் உயிரிழந்தார். தூதையைச் சேர்ந்தவர் கண்ணன் 56, நேற்று மதுரை - - பரமக்குடி நான்கு வழிச்சாலையில் டி.பாப்பான்குளத்தை டூவீலரில் கடக்க முயன்றார். அப்போது ராமேஸ்வரத்தில் இருந்து கோவை சென்ற கார் டூவீலர் மீது மோதியதுடன் சாலையோரம் நின்றிருந்த சரக்கு வேன் மீதும் மோதியது. இதில் டூவீலரில் சென்ற கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், சரக்கு வேனில் இருந்த முத்துராஜா, சேகர்,அன்னலட்சுமி, ஜனனி, அடைக்கலம், பெத்தம்மாள் காயமடைந்தனர். திருப்புவனம் போலீசார் கார் டிரைவர் கோவை சூலூரைச் சேர்ந்த ராமிடம் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை