உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  பெருமாள் கோயில்களில் நாளை சொர்க்கவாசல் திறப்பு

 பெருமாள் கோயில்களில் நாளை சொர்க்கவாசல் திறப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட பெருமாள் கோயில்களில் நாளை சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெறுகிறது. சிவகங்கை: சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நாளை காலை 4:30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி நடைபெறும். உற்ஸவர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு எழுந்தருள்வார். நாளை காலை 5:30 மணிக்கு சொர்க்கவாசலில் ஸ்ரீதேவி பூதேவியருடன் சுந்தரராஜ பெருமாள் எழுந்தருள்வார். இரவு கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடுநடைபெறும். தேவகோட்டை: தேவகோட்டை கோதண்டராமர் கோயிலில் நாளை காலை 4:00 மணிக்கு பூஜைகளுக்கு பின் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும். ரங்கநாத பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி சிறப்பு பூஜைகளை தொடர்ந்து அதிகாலை 4:30 மணி அளவில் ரங்கநாத பெருமாள் பரமபத வாசலில் எழுந்தருள்கிறார். மாலையில் இரண்டு கோயில்களிலும் சுவாமி கருட சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருப்புத்துார்: ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோயிலில், நாளை காலை 4:30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி நடைபெறும். அதனை தொடர்ந்து உற்ஸவராக ஸ்ரீதேவி, பூதேவியருடன் நாராயண பெருமாள் எழுந்தருள் வார். காலை 5:30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி