உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குரூப் 1 தேர்வில் 2694 பேர் பங்கேற்பு

குரூப் 1 தேர்வில் 2694 பேர் பங்கேற்பு

தேனி, : மாவட்டத்தில் நடந்த குரூப் 1 முதல்நிலை தேர்வில் 2694 பேர் பங்கேற்றனர். 1181பேர் ஆப்சென்ட் ஆகினர்.தமிழகத்தில் அரசுத்துறைகளில் சப் கலெக்டர், டி.எஸ்.பி., வணிகவரித்துறை உதவி கமிஷனர், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 முதல்நிலைத் தேர்வு நேற்று நடந்தது. மாவட்டத்தில் 14 மையங்களில் தேர்வு காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 வரை நடந்தது. தேர்வு எழுத 3875 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதில் 2694 பேர் தேர்வு எழுதினர். மீதமுள்ள 1181 பேர் ஆப்சென்ட் ஆகினர். தேர்வு மையங்களை கலெக்டர் ஷஜீவனா பார்வையிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை