உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / சார்ஜ் போட்டிருந்தபோது தீப்பிடித்து பைக், 2 கார்கள் எரிந்து சேதம்

சார்ஜ் போட்டிருந்தபோது தீப்பிடித்து பைக், 2 கார்கள் எரிந்து சேதம்

விக்கிரமசிங்கபுரம்:விக்கிரமசிங்கபுரத்தில் சார்ஜ் போட்டிருந்தபோது தீப்பிடித்து எலக்ட்ரிக் பைக், ௨ கார்கள் எரிந்து சேதமடைந்தன. விக்கிரமசிங்கபுரம் வடக்குரதவீதியில் வசித்து வருபவர் சுப்பையா மகன் மாணிக்கம் (34). இவர் நேற்று காலை தனது வீட்டில் பேட்டரி பைக்கிற்கு சார்ஜ் போட்டிருந்தார். அப்போது திடீரென பைக் தீ பிடித்து எரிந்தது. தீ கொழுந்துவிட்டு எரிந்த நிலையில் அதன் அருகில் நிறுத்தியிருந்த 2 கார்களிலும் தீ பிடித்தது. இதில் எலக்ட்ரிக் பைக்கும் ஒரு காரும் முழுவதும் எரிந்தது. சம்பவ இடத்திற்கு அம்பாசமுத்திரம் தீயணைப்பு துறை அலுவலர் பலவேசம் தலைமையில் வந்த வீரர்கள் தீயை அணைத்தனர். இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

வாய்மையே வெல்லும்
ஆக 03, 2024 09:27

பெட்டிச்செய்தி படிக்கும்போது ..... எனக்கு புரிந்தவரை இந்த விஷயம் அசால்ட்டாக இருக்க லாகாது அதே சமயத்தில் இது திகிலூட்டும் விடயம். இன்றைய தேதியில் எத்தனையோ மக்கள் பேட்டரி போட இரண்டு சக்கர வண்டி வைத்துள்ளார் இப்போது. அனைவரின் தூக்கமும் போச்சு .. திக் திக் திக் நேரம்.. தீயினால் வண்டிக்கு சேதாரம் என்னாகுமோ ஏதாகுமோ என்கிற கவலைகள் இனி மூட்டி கொள்ளும்.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி