மேலும் செய்திகள்
பேருந்து மோதி பைக் தீக்கிரை வாலிபர் பலி; பயணியர் பீதி
20 hour(s) ago
கிணற்றில் விழுந்த மாடு மீட்பு 4வது முறையாக தொடரும் அவலம்
20 hour(s) ago
கூவம் ஆற்று தரைப்பாலங்கள் மூழ்கியதால் போக்குவரத்து தடை
20 hour(s) ago
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி பிரித்வி நகர் பகுதியில் வசிப்பவர் ஆரோக்யமேரி, 50. பெரியபுலியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளி தலைமை ஆசிரியர். நேற்று காலை, கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி புறநகர் மின்சார ரயிலில் பயணித்தார். கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில், உடன் பயணித்த வாலிபர் ஒருவர், ஆரோக்யமேரி அணிந்திருந்த, மூன்றரை சவரன் செயினை அறுத்து கொண்டு ரயில் நிலையத்தில் இறங்கி தப்பி ஓட்டம் பிடித்தார். அந்த ரயில் நிலையத்தில் ஏறிய பெண் ஒருவர், நடைமேடையில் நின்ற அவரது மகனிடம் தெரிவித்தார். அவரது மகன், அந்த நபரை விரட்டி சென்று பிடித்தார். பிடிபட்ட நபர் பொன்னேரியை சேர்ந்த கவுதம், 23, என்பது தெரிந்தது. அங்கிருந்தவர்கள், அவரை கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
20 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago