| ADDED : மார் 14, 2024 08:15 PM
திருத்தணி:திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஒன்றியம், சந்திரவிலாசபுரம் கிராமத்தைச் சேர்ந்த சபாபதி மகன் கேசவன், 19, அரசினர் கலைக் கல்லுாரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது வீட்டிற்கு அதே பகுதியைச் சேர்ந்த, ஐந்து வயது சிறுமி ஒருவர் வந்து சென்றுள்ளார்.நேற்று காலை சிறுமி, மாணவர் வீட்டிற்கு வந்த போது, தனி அறைக்கு சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்படி திருத்தணி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து கல்லுாரி மாணவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.