உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / குலசை முத்தாரம்மன் கோயில்ஆடிக்கொடை விழா

குலசை முத்தாரம்மன் கோயில்ஆடிக்கொடை விழா

உடன்குடி:குலசேகரன்பட்டணம் ஆடிக் கொடைவிழா வரும் ஆக.1ம் தேதி துவங்குகிறது.குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயிலில் ஆடிக் கொடைவிழா வரும் ஆகஸ்ட் 1ம் தேதி இரவு 9 மணிக்கு மாக்காப்பு தீபாராதனையுடன் துவங்குகிறது. இரவு 10 மணிக்கு வில்லிசையும், வரும் ஆக.2ம் தேதி காலை 7 மணிக்கும், 9 மணிக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனையும், பகல் 10 மணிக்கு கும்பம் வீதி உலாவும், பகல் 11.15 மணிக்கு வில்லிசையும், பகல் 12 மணிக்கு அன்னதானதும், மாலை 5 மணிக்கும், இரவு 7 மணிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனையும், இரவு 8 மணிக்கு வில்லிசையும், இரவு 9 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும், இரவு 11 மணிக்கு கும்பம் வீதி உலாவும், இரவு 11 மணிக்கு கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது. வரும் 3ம் தேதி காலை 11 மணிக்கு கும்பம் திருவீதி உலாவும், காலை 11.30 மணிக்கு வில்லிசையும், மாலை 5 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், இரவு 8.30 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடக்கிறது. ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி சங்கர் செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை