உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / அருணாசலேஸ்வரர் கோவிலில் மார்கழி மாத பிரதோஷ பூஜை

அருணாசலேஸ்வரர் கோவிலில் மார்கழி மாத பிரதோஷ பூஜை

திருவண்ணாமலை:திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், மார்கழி மாத தேய்பிறை பிரதோஷ பூஜை வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், மார்கழி மாத தேய்பிறை பிரதோஷ பூஜை நடந்தது. இதை முன்னிட்டு, கோவில் கொடி மரத்தின் அருகில் உள்ள சிறிய நந்தி, கிளி கோபுரம் எதிரில் உள்ள அதிகார நந்தி, ஆயிரங்கால் மண்டபம் அருகில் உள்ள பெரிய நந்தி, ஆகியவற்றிற்கு, பால், பன்னீர், அரிசி பொடி, அபிேஷக பொடி, தயிர், பஞ்சாமிர்தம், தேன், எலுமிச்சை, விபூதி, இளநீர், மற்றும் பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டது. மலர்களால் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டு, மஹா தீபாராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள், அண்ணாமலையாருக்கு அரோகரா, ஓம் நமச்சிவாய என பக்தி கோஷம் எழுப்பியும், சிவ வாத்தியங்கள் இசைத்தும் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை