| ADDED : ஜன 19, 2024 07:33 AM
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் பென்னி குயிக் பிறந்த நாளை முன்னிட்டு விவசாய தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது.விவசாயிகள் நல கூட்டமைப்பு சார்பில் பஸ் நிலையத்தில் நடந்த விழாவிற்கு, பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம் தலைமை தாங்கினார். பேரூராட்சி துணைச் சேர்மன் பாலாஜி, மாவட்ட விவசாய அணி பாபு ஜீவானந்தம், பிரதிநிதி திலகர், நகர செயலாளர் நைனா முகமது, முன்னாள் கவுன்சிலர் பாபுஜி பாண்டியன், தொழிலதிபர் யுவராஜ் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி நியமன குழு தலைவர் சர்க்கார் பாபு வரவேற்றார்.மாநில விவசாய அணி செயலாளர் சிவா பென்னி குயிக் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விவசாயிகள், தொழிலாளர்கள், ஆதரவற்றோருக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.தொழிலதிபர் செல்வம், சிறு, குறு தொழில் சங்க மாவட்ட தலைவர் அம்மன் கருணாநிதி, மாவட்ட விவசாய அணி செல்வரங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.