| ADDED : மே 01, 2024 01:59 AM
சென்னை:கடந்த 2022ம் ஆண்டு மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த, தமிழக அரசின் தணிக்கை அறிக்கை, நேற்று முன்தினம் தமிழக கவர்னர் ரவியிடம் ஒப்படைக்கப்பட்டது.இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவுக்கூறு, 151(2)ன்படி இந்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி, தமிழக அரசின் கணக்குகள் மீதான தன் தணிக்கை அறிக்கைகளை, சட்டசபையில் வைப்பதற்கு, கவர்னருக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதன்படி, 2022 மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த ஆண்டிற்கான, தமிழக அரசின் இந்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் தணிக்கை அறிக்கை, மாநில சட்டசபையில் சமர்பிப்பதற்காக, நேற்று முன்தினம் தமிழக கவர்னரிடம் ஒப்படைக்கப்பட்டது.