உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலிக்கு மெத்தனாலே காரணம்: சி.பி.சி.ஐ.டி., விசாரணையில் திடுக்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலிக்கு மெத்தனாலே காரணம்: சி.பி.சி.ஐ.டி., விசாரணையில் திடுக்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் விற்பனை செய்தது தண்ணீர் கலந்த மெத்தனால் என்பது சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்ட 229 பேர், சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில், 150 பேர் குணமடைந்தனர். 65 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்;. 14 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.இதுதொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கு பதிந்து சாராய வியாபாரி, மெத்தனால் சப்ளையர்கள் என, 21 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கண்ணுகுட்டி கோவிந்தராஜ், 50, அவரது மனைவி விஜயா, 44, சின்னதுரை, 36, ஜோசப், 40, உட்பட 11 பேரை காவலில் எடுத்து விசாரிக்கின்றனர்.விசாரணையில், சென்னையை சேர்ந்த கவுதம்சந்த், பன்ஷிலால் ஆகியோர் உரிமம் பெற்று வெளிமாநிலத்தில் இருந்து மெத்தனாலை இறக்குமதி செய்து விற்பனை செய்யும் இவர்கள், எவ்வித உரிமமும் இல்லாத சென்னை சிவக்குமார் மற்றும் மடுகரை மாதேஷ் ஆகியோருக்கு விற்பனை செய்ததும், அதை கருணாபுரம், மாதவச்சேரி, சேஷசமுத்திரம் பகுதி சாராய வியாபாரிகள் வாங்கி, தண்ணீர் கலந்து விற்றதும் தெரிய வந்துள்ளது.அதை தொடர்ந்து, 11 பேரில் ஐந்து பேரை நேற்று மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மற்ற ஆறு பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். அவர்களை இன்று மாலை 3:00 மணிக்கு கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

sridhar
ஜூலை 03, 2024 23:15

ஓஹோ, மாநில அரசு தான் காரணம் என்று சில ஊடகங்கள் வதந்தி பரப்பி அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தியது, இப்போது உண்மை cbcid மூலன் தெரிந்து விட்டது , உடனே அந்த மெத்தனாலை கைது செய்யுங்கள் .


A P
ஜூலை 03, 2024 22:49

அப்போ ஜாபர் சாதிக் சமாச்சாரம் போதை பொருள் இல்லைலயா ? அது ஹராம் இல்லையா ?


Gurumurthy Kalyanaraman
ஜூலை 03, 2024 20:03

அடடே. தெரியாம போச்சே சார். நாங்க என்னமோ எத்தனால்தான் என்றல்லவா நினைத்திருந்தோம்


Indhuindian
ஜூலை 03, 2024 18:13

அப்போ கலெக்டர் சும்மா அடிச்சுவிட்டாரா அவரை அடிச்சிவிடச்சொன்னது அவரை கண்டுபிடிச்சி ஆடிட்டிங்


karthik
ஜூலை 03, 2024 15:27

அப்பாடா நான் கூட ஏதோ திமுக அரசு தான் காரணம் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்..


Thanga Durai
ஜூலை 03, 2024 13:54

இப்பதான் இதையே கண்டு பிடிச்சிஇருக்காங்களா வெளங்கிரும்


sugumar s
ஜூலை 03, 2024 13:40

DM cannot do CBI as those who mfr illicit liquor is their party people funding various party initiatives. Please dont ask CBI and put DM in trouble. TN may plan to sell in TASMAC with lower rate and also give compensation based on death frequency


பேசும் தமிழன்
ஜூலை 03, 2024 12:41

உங்கள் விசாரணையை தூக்கி குப்பையில் போடுங்க... சிபிஐ விசாரணை மட்டுமெ உண்மையை வெளியே கொண்டு வரும்.


Barakat Ali
ஜூலை 03, 2024 12:36

போதையே ஹராம் என்கிற போது அதில் எந்த கெமிக்கல் இருந்தாலும் தீயதே ... ஆட்சியாளர்களுக்கு எதுவுமே தெரியாதா ?? அவர்கள் அப்பாவிகளா ??


karthik
ஜூலை 03, 2024 15:30

சவூதி அரேபியா ஜெத்தா நகரில் முதல் லைசென்ஸ் பார் திறந்துவிட்டார்கள் தெரியுமா


duruvasar
ஜூலை 03, 2024 12:01

குழு போட்டு விசிரித்தால் தான் நம்ம அரசுக்கு எல்லாம் தெரிய வருகிறது. இல்லையென்றால் அந்த பகுதி காவல்துறை, வருவாய் துறை அதிகாரிகள் , போது மக்கள் யாருக்கும் தெரியாமல் வருட கணக்கில் இது நடந்துகொண்டிருக்கிறது. நாங்க நம்பிட்டோம். 10 லட்சமும் கொடுத்தாகிவிட்டது. மேட்டர் ஓவர். மாட்டை விட்டுவிட்டு கண்னுக்குட்டியை பிடிக்கும் கதை சுவாரசியமாக இருக்கிறது.. வாழ்க திராவிட மாடல் அரசு.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி