உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூடங்குளம் அணுமின் நிலையம் 77 நாட்களுக்கு பின் மின் உற்பத்தி

கூடங்குளம் அணுமின் நிலையம் 77 நாட்களுக்கு பின் மின் உற்பத்தி

சென்னை:திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் மத்திய அரசுக்கு, கூடங்குளம் அணுமின் நிலையம் உள்ளது. அங்கு தலா, 1,000 மெகாவாட் திறனில் இரு அணு உலைகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. அதிலிருந்து தமிழகத்திற்கு தினமும், 1,152 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதி மின்சாரம், பிற மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது.கூடங்குளம் மின் நிலையத்தின் முதல் அணு உலையில், எரிபொருள் நிரப்பும் பணிக்காக, ஜன., 29 முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால், தமிழகத்திற்கு தினமும், 550 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது.முதல் அணு உலையில், 77 நாட்களுக்கு பின் நேற்று முன்தினம் முதல் மீண்டும் மின் உற்பத்தி துவங்கியுள்ளது. இதனால், மின்வாரியத்திற்கு கூடுதல் மின்சாரம் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி