| ADDED : டிச 10, 2025 06:19 AM
மதுரை: விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில இணை பொதுச்செயலர் சந்திரசேகரன் அளித்த பேட்டி: தமிழக அரசின் தொல்லியல் துறை ஆவணங்களில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் தீபம் ஏற்றியதற்கான ஆதாரங்கள் உள்ளன. அதை நில அளவை கல் என தி.மு.க., - எம்.பி., கனிமொழி கூறிவந்தார். அது இப்போது பொய் என நிரூபிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில், உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும், தீபத்துாணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்த தி.மு.க., அரசுக்கு, சட்டசபை தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவர். ஹிந்து விரோத போக்கில் தி.மு.க., அரசு ஈடுபட்டு வருகிறது. தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என திருப்பரங்குன்றத்தில் இருக்கும் அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களும், மதுரை கலெக்டரிடம் மனு கொடுத்து வருகின்றனர். திருப்பரங்குன்றம் மலையில் இருக்கும் தீபத்துாணில் தீபம் ஏற்றுவதில் யாருக்கும் ஆட்சேபனை இல்லை. இதை புரிந்து கொண்டாவது, தீபத்துாணில் தீபம் ஏற்ற தி.மு.க., அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.