உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / இவ்வளவு சகஜமா பேசுறாரே!

இவ்வளவு சகஜமா பேசுறாரே!

பிளஸ் 2 தேர்வு முடிவில் திருப்பூர் மாவட்டம், மாநில அளவில் முதலிடம் பெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, மாவட்ட கல்வி அலுவலர் பக்தவச்சலம் மற்றும் அதிகாரிகள் கலெக்டர் கிறிஸ்துராஜை சந்தித்து, தேர்ச்சி விபரங்களை அளித்தனர்.அவசர, அவசரமாக தன் அலுவலகம் வந்த கலெக்டர், தலையை கூட சரிவர வாரிக் கொள்ளவில்லை. மாநிலத்தில் திருப்பூர் முதலிடம் என்ற மகிழ்ச்சியில் இருந்த அவர், அப்படியே நிருபர்களுக்கு போட்டோ, வீடியோவுக்கு போஸ் கொடுத்தார்.இதை கவனித்த வீடியோகிராபர் ஒருவர், 'சார்... வியர்வையை துடைத்துக் கொள்ளுங்கள்; தலையை வாரிக் கொள்ளுங்கள்... ரிலாக்ஸாக இருங்கள்...' எனக்கூற, 'திருப்பூரில் ரொம்ப வெயிலுப்பா... அதனால, தலைக்கு எண்ணெய் வைத்திருக்கிறேன்...' என, கலெக்டர் ஜாலியாக கமென்ட் அடித்தார்.இதைப் பார்த்த கல்வி அதிகாரி ஒருவர், 'கலெக்டர் ஜாலி டைப்பா இருக்கார்... இவ்வளவு சகஜமாக பேசுறாரே...' எனக்கூற, அங்கே இருந்தவர்கள் அதை ஆமோதித்து சிரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Bahurudeen Ali Ahamed
மே 14, 2024 19:54

நல்லது மக்களுடன் சகஜமாக ஒருவரால்தான் மக்களின் பிரச்சினைகளை சரியாக உணர்ந்து சரி செய்ய முடியும், இதை பார்க்கும் வருங்கால சந்ததியினரும் பெரிய அதிகாரிகளாகும்போது மக்களை சகஜமாக அணுகுவார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை