கவிதைச்சோலை!
எதிரிகள் எங்குமில்லை...கல் எறிந்தவர்கள் மீதுகல் எறிந்தால்கலவரம் மூளும்!தடி எடுத்தவர்கள் மீதுதடியடி நடத்தினால்உயிர்ச்சேதம் உண்டாகும்!கத்தி எடுத்தவர்களை எதிர்த்து, கத்தி எடுத்தால்கை, கால்கள் வெட்டுப்படும்!கற்களை வீசினாலும்காய் கனிகளைபரிசாக தருகின்றனமரங்கள்!எதிரிஎந்த ஆயுதம் எடுத்து வந்தாலும்அன்பு - எனும் ஆயுதம் முன்அனைத்தும் வலுவிழந்து போகும்!நம் எதிரில் இருப்பவர்கள்எதிரியாநண்பரா என்பதைநம் வார்த்தைகள் தான்தீர்மானிக்கின்றன!சண்டையிட்டுவாழ்வதில்சந்தோஷம் ஏது?ஒற்றுமையாய் வாழ்ந்து பார்ஒருபோதும் இல்லை தீது!நீயா, நானாபார்ப்போம் வா - என்றுசண்டையிடுவதில்ஒருவர் வெல்வார்!நீயும், நானும்ஒன்று - என்றுசமாதானமாகிப் போஇருவரும் வெல்லலாம்!பி.சி. ரகு, விழுப்புரம்.