உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சனி, ஞாயிறுகளில் லீவு இல்லை: நீதிபதிகள் வேதனை

சனி, ஞாயிறுகளில் லீவு இல்லை: நீதிபதிகள் வேதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி,'உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்துக்கு நீண்ட கோடை விடுமுறை அளிப்பதை விமர்சிப்போர், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட, நீதிபதிகளுக்கு விடுமுறை இல்லை என்பதை புரிந்து கொள்வதில்லை' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. மேற்கு வங்க அரசின் அனுமதி இல்லாமல், சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அம்மாநில அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை இன்றைய தினத்துக்கு ஒத்தி வைத்த அமர்வு, வரும் 20ம் தேதியிலிருந்து நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை என்பதால், வாதங்களை நிறைவு செய்யும்படி இரு தரப்புக்கும் அறிவுறுத்தியது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்துக்கு நீண்ட விடுமுறை அளிக்கப்படுகிறது என, ஒரு தரப்பினர் விமர்சிக்கின்றனர். ஆனால், நாங்கள் எப்படி செயல்படுகிறோம் என்பது அவர்களுக்கு தெரியாது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட எங்களுக்கு விடுமுறை இல்லை. அந்த நாட்களிலும் கருத்தரங்கு, மற்ற பணிகளை நாங்கள் கவனிக்க வேண்டும். விமர்சனம் செய்வோர் இதை புரிந்து கொள்வதில்லை. விடுமுறை நாட்களில், தாங்கள் விசாரிக்கும் வழக்குகளில் நீதிபதிகள் தீர்ப்பு எழுதுவர். நடைமுறை தெரியாதவர்கள் இதை விமர்சிக்கின்றனர்.இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.இந்த வழக்கில், மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ''உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தினசரி 50- - 60 வழக்குகளை கையாள்கின்றனர். விடுமுறை எடுக்க அவர்கள் தகுதியானவர்கள். நீதிபதிகள் எப்படி செயல்படுகின்றனர் என்பது விமர்சிப்போருக்கு தெரியாது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Faizal
மே 03, 2024 15:26

Judges and magistrates work from : AM to : PM, hearing cases Case study and studying the case they do at their home time Fees senior lawyers make one day is what these judges make in a month In countries like the UK, there are or assistants for a case, and judges do not do the adjournment-type work It becomes administrative work, and appeals are strict Even one day delay for the death of a mother during corona is not condoned Appeals stages are more in India unlike in the UK Pushing them to work long hours will not solve the problem Making a scapegoat of judges will deter intelligent people from joining this profession or better to remain as a lawyer


Natarajan Ramanathan
மே 02, 2024 20:26

ஒரு சாதாரண வங்கி மேலாளர்கூட சனி மற்றும் ஞாயிறு நாட்களில் பணிசெய்வதை பார்க்கலாம் அநீதிபதிகளுக்கு பள்ளி சிறுவர்களைவிட அதிக நாட்கள் விடுமுரை அளிப்பது மிகவும் அநியாயம்


SP
மே 02, 2024 19:59

அளவுக்கு அதிகமான பணியாளர்கள், அளவுக்கு அதிகமான அதிகாரங்கள் இதையெல்லாம் துறந்துவிட்டு இதைச் சொன்னால் அதில் ஒரு அர்த்தம் உண்டு.


Vivek
மே 02, 2024 17:45

ஆங்கிலேயர் காலத்தில் அவர்கள் கோடை வாசஸ்தலம் செல்ல வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட கோர்ட் கோடை விடுமுறை இப்பவும் தேவையா என்பதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும்


SIVAN
மே 02, 2024 15:40

இன்றிய காலகட்டத்தில் பல நாடுகளில் சிவில், லேபர் மற்றும் consumer cases online ல் நடை பெற்று தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன, பெருகுக்குற்ற cases மட்டும் நீதி மன்றத்தில் விசாரிக்கப்படலாம் இதனால் பெரிய செலவுகள் மிச்சப்படும், நேரமும் நிறைய இருக்கும் கோடை விடுமுறை? சிரிப்பு வருது, நீதிபதிகள் என்ன குழந்தைகளா? எல்லா மக்களும் வருடம் முழுவதும் வழைக்கிறார்கள், நீதிமன்றம் மட்டும் ஒரு மாதம் உறங்கும், என்ன லாஜிக்


Rengaraj
மே 02, 2024 12:23

நாட்டில் ஏழை மக்களின் உணவுத்தேவைக்காக அந்தியோத்யா அரிசி திட்டம் உள்ளது அவர்கள் பயணம் செய்வதற்காக அந்தியோத்யா ரயில் இருக்கிறது ஏழைகளுக்காக ஜன்தன் வங்கிக்கணக்கு உள்ளது பாலியல் குற்றங்களுக்காக சிறப்பு நீதிமன்றங்கள், குடும்பவழக்குகளுக்காக குடும்பநல நீதிமன்றங்கள் போன்று ஏழைமக்கள் துயர் துடைக்க அவர்களுக்காக சிறப்பு நீதிமன்றங்கள் ஏன் அமைக்கக்கூடாது? நுகர்வோர் நீதிமன்றங்கள் போன்று இவர்களுக்காக சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்தால் அது நீதிமன்றங்கள்மேல் அடித்தட்டு மக்களுக்கு நம்பிக்கையை வரவைக்கும் அல்லவா? சிறு சிறு குற்ற வழக்குகள், திருட்டு வழக்குகள், வரப்பு மற்றும், வாய்க்கால் தகராறு, பொது சுவர், பொதுவேலி வழக்குகள், இருவீட்டார்களுக்கு இடையேயான கைகலப்பு, இப்படி நாட்டில் நிறைய தேங்கி உள்ளன அவற்றில் ஏழை பெற்றோர்களும் முதியவர்களும் சம்பந்தப்பட்டுஇருப்பார்கள் இவற்றில் குற்ற வழக்குகளை தீர்க்கும் வரை அந்த வழக்குகளின் குற்றவாளிகளை பாதுகாப்பது அரசின் கடமையாக உள்ளது இப்போது இருக்கும் நீதிபதிகளின் தேவையை கருத்தில் கொண்டு வாரம் இருமுறை அல்லது ஒருமுறையாவது அவர்களுக்காக இந்த நீதிமன்றங்கள் இயங்கலாம் அல்லவா ?


jayvee
மே 02, 2024 11:37

அதிகபட்சம் மணிநேரம் வேலை ஆனால் மணி நேரமும் வேலை செய்யும் போலீசார் அடிமட்ட ஊழியர்கள் குறிப்பாக ராணுவ வீரர்கள் அவர்களை ஒப்பிட்டு பாரத்தால் குளிர்சாதன வாகனம், அலுவலகம், வீடு வீடு பணியாளர்கள் என்று இருப்பவர்கள் குறை பட்டுக் கொள்ளக்கூடாது


ஆரூர் ரங்
மே 02, 2024 10:47

நடு ராத்திரியில் சமாதி கட்ட கடற்கரையில் இடம் போன்ற அதிமுக்கிய வழக்குகளை விசாரித்தால் சோர்வாகத்தானிருக்கும்.


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
மே 02, 2024 09:48

இதற்க்கே நீதிபதிகள் இப்படி குமுறுகிறார்கள் ஆனால், தினக்கூலி செய்யும் ஏழை மக்களின் பாடு என்னவென்று அறிவார்களோ? இவர்களுக்காவது லட்சக்கணக்கில் பணம் கிடைக்கிறது ஆனால், ஏழைகளுக்கு மாடாக உழைத்து அதுவும் இல்லை


Kanns
மே 02, 2024 08:44

Sack & Punish Judges Not Giving Fast & Quality Judgements User& III Party Verifications to Common People Hang Case Hungry Criminals Never Punishing False Complainants esp Women, SCs, Unions-Gangs, advocates etc Those Cribbing Must Resign as all Even Govt Officers/Pvt Managers work additionally on Sundays Holidays


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை