உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / நீதிபதியை சந்தித்து அழுத்தம் கொடுத்தது நீதி பரிபாலன முறையில் குறுக்கிடும் செயல்

நீதிபதியை சந்தித்து அழுத்தம் கொடுத்தது நீதி பரிபாலன முறையில் குறுக்கிடும் செயல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நீதிபதியை நேரில் சந்தித்து, சவுக்கு சங்கர் தரப்பில் தாக்கல் செய்த வழக்கை விசாரிக்க வேண்டாம் என அழுத்தம் கொடுத்தது, நீதி பரிபாலன முறையில் குறுக்கிடுவதாகும் என்பதால், அவமதிப்பு வழக்கு எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 'யு டியூபர்' சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, அவரது தாயார் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பாலாஜி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், இந்த வழக்கில் பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் கேட்டார். இதற்கிடையில் நீதிமன்ற உத்தரவுப்படி, கைது தொடர்பான ஆவணங்களை அரசு தாக்கல் செய்தது.குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்த உத்தரவை ரத்து செய்து, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால், 'அரசு தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும்; அதன்பின், இந்த வழக்கை இறுதியாக விசாரிக்க வேண்டும்' என, நீதிபதி பாலாஜி உத்தரவிட்டார். வெவ்வேறான உத்தரவுகளை நீதிபதிகள் பிறப்பித்ததால், மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்கு, இந்த வழக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை, உடனடியாக விசாரணைக்கு எடுத்தது குறித்து, நீதிபதி சுவாமிநாதன் தன் உத்தரவில், 'மேல் மட்டத்தில் உள்ள இருவர், என்னை நேரில் சந்தித்தனர். தகுதி அடிப்படையில் இந்த வழக்கை விசாரிக்க, அவர்கள் விரும்பவில்லை. 'அவர்கள் என்னிடம் பேசி அழுத்தம் கொடுத்திருக்காவிட்டால், அட்வகேட் ஜெனரல் கூறியபடி, வழக்கமான நடைமுறையை பின்பற்றியிருப்பேன். வழக்கை விசாரணைக்கு ஏற்று, நோட்டீஸ் பிறப்பித்திருந்தால், என்னை சந்தித்தவர்களின் நோக்கம் நிறைவேறியிருக்கும்.'மேலும், ரிட் விதிமுறைகள் எதையும், நான் மீறவில்லை. ஆவணங்களை பார்த்த மாத்திரத்தில், சட்டவிரோத உத்தரவு என தெரியும்பட்சத்தில், அதை ரத்து செய்யலாம்' என கூறியுள்ளார்.இந்நிலையில், நீதிபதி சுவாமிநாதனை நேரில் சந்தித்தவர்களுக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி, உயர் நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் மனு அனுப்பி உள்ளார். அதில் 'நீதிபதியை சந்தித்த இருவருக்கு எதிராக, அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும். அவர்கள் யார் என்பதை கண்டறிய வேண்டும். அதற்காக, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, கூறியுள்ளார். ''நீதிபதியை நேரில் சந்தித்து, அழுத்தம் கொடுத்த செயல், நீதி பரிபாலன முறையில் குறுக்கிடுவது போலாகும் என்பதால், அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஹரிபரந்தாமனும் கூறியுள்ளார். இது குறித்து, முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் கூறியதாவது: குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டு, விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட, 15க்கும் மேற்பட்ட வழக்குகளில், சவுக்கு சங்கர் தரப்பு வழக்கை மட்டும் விசாரணைக்கு எடுத்தது குறித்து, நீதிபதி பதில் அளித்துள்ளார்.மேல் மட்டத்தில் உள்ள இருவர் தன்னை சந்தித்ததாக, நீதிபதி கூறியுள்ளார். இந்த செயல், நீதி பரிபாலன முறையில் குறுக்கிடுவது போலாகும்; நீதிமன்ற அவமதிப்பும் ஆகும். நீதிபதி தங்கி இருக்கும் இடத்தில், பாதுகாப்பு போலீசார் இருப்பர். நீதிமன்றத்தில் உள்ள அறை என்றால், உதவியாளர்கள் இருப்பர். அதனால், தன்னை சந்திக்க வந்தவர்களை, அங்கேயே பிடித்து கொடுத்திருக்கலாம்.நீதி பரிபாலன முறையில் குறுக்கிடுவதாக தான், சங்கருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்து தண்டனை வழங்கினார். அப்படி இருக்கும்போது, இந்த இருவருக்கு எதிராகவும், அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும்.

அவகாசம்

பொதுவாக, ஆட்கொணர்வு வழக்கில், அரசு தரப்பில் பதில் அளிக்க அவகாசம் வழங்கப்படும். இந்த வழக்கில் அட்வகேட் ஜெனரலும், பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் கேட்டுள்ளார். மற்றொரு நீதிபதி பாலாஜியும், பதில் அளிக்க அரசை அனுமதிக்க வேண்டும் என கூறியுள்ளார். கள்ளச்சாராய வழக்குகளில், குண்டர் தடுப்பு சட்டம் பிரயோகிக்கும்போது, அதை எதிர்த்த வழக்குகளை விசாரித்த அமர்வில், நானும் இருந்துள்ளேன். விசாரணைக்கு வந்த நிலையில், குண்டர் சட்ட கைதை ரத்தும் செய்துள்ளோம். ஆனால், அரசு வழக்கறிஞர், பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் கேட்டால், அவகாசம் அளித்து தான் விசாரித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

RAVINDIRAN B
மே 29, 2024 20:29

அரசியல் அதிகார திமிரில் நீதிபதிகளை நிர்பந்தம் படுத்தியவர்களை உடனடியாக கடுமையாக தண்டிக்க வேண்டும்


V GOPALAN
மே 29, 2024 12:34

So Supreme court Bail Judgement to Kejriwal and Ponmudi also due to political pressure might be. Judiciary under threat. Luckily very few judges alteast at High Court level we have


ramani
மே 28, 2024 22:54

கைபுண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை. இதை யார் எந்த கட்சி செய்திருக்கும் என்று சொல்லாமலே புரியும். மாடல் போனால்தான் நீதித்துறையும் வாழும்


Saai Sundharamurthy AVK
மே 28, 2024 21:38

பொன்முடி எம்.எல்.ஏ பதவி, அமைச்சர் பதவியை திரும்ப வாங்கியதை பார்த்தால், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை கூட மிரட்டியிருப்பார்கள் போலிருக்கிறது.


பேசும் தமிழன்
மே 28, 2024 19:58

அது தான் ஆர் எஸ் பாரதி.... எத்தனையோ முறை சொல்லி இருக்கிறாரே ???


Narayanasami Thirumeni
மே 28, 2024 16:57

அருமை


ஆரூர் ரங்
மே 28, 2024 12:36

முன்பு ஒரு வழக்கில் நீதியரசர் ரகுபதி மத்திய அமைச்சர் ஒருவர் அழுத்தம் தந்ததாக தலைமை நீதிபதிக்கு எழுதினார். பின்னர் அந்த அமைச்சர் ஆ ராசா என நீதியரசர் கலிபுல்லா கூறினாரே. இப்போதும் அதே கட்சி நீதித்துறையின் செயல்பாட்டில் குறுக்கிடும் போக்கைத் தொடருகிறதா?


SUBRAMANI
மே 28, 2024 12:30

The judge should not be influenced by out siders those who are not part of judiciary. When the judge acussing somebody,why he is hesitating to reveal the name of the persons who approached him,then why he is taken the particular case omitting all other case ,is it correct ? and judgement can be delivered without submission of respondents ? So hounarable chief justice,should contact a through enquiry on this ,so that people confidence on judiciary increased.


RAJA68
மே 28, 2024 09:32

ADவCATE CUM RETD IPS OFFICER VARADARAJ இது பற்றி விரிவாக யூ டியூப் செய்தி கூறியுள்ளார். எல்லோரும் கேட்கலாம்.


duruvasar
மே 28, 2024 09:31

இந்த இருவரின் மீதான அவமதிப்பான வழக்கை மூன்றாவது நீதிபதியின் தீர்ப்புக்கு பிறகு கூட எடுத்துக்கொள்ளலாம். எனவே தற்சமயம் எண்ணெயில் இட்ட அப்பம் போல் குதிப்பவர்கள் எண்ணத்திற்க்கு உடனடி நடவடிக்கை தேவையிருக்காது.


மேலும் செய்திகள்