உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சாரம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர காவடி பூஜை

சாரம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர காவடி பூஜை

புதுச்சேரி: சாரம் சுப்ரமணிய கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, காவடி பூஜை நடந்தது.சாரம் நாகமுத்து மாரியம்மன் கோவிலில், சுப்ரமணிய சுவாமி சன்னதி உள்ளது. பங்குனி உத்திர விழாவையொட்டி, சுப்ரமணிய சுவாமிக்கு நேற்று காலை 7:00 மணிக்கு மகா அபிேஷகம் மற்றும் காவடி பூஜை நடந்தது. அதனை தொடர்ந்து மகா தீபாரதனை நடந்தது.நிகழ்ச்சியில், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இரவு சுவாமி வீதியுலா நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுப்ரமணிய சுவாமி அருள்பாலித்தார்.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை