உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கால்பந்து / சுனில் செத்ரி 150 * இந்தியாவுக்கு கிடைக்குமா வெற்றி

சுனில் செத்ரி 150 * இந்தியாவுக்கு கிடைக்குமா வெற்றி

கவுகாத்தி: உலக கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. இது, இந்திய கேப்டன் சுனில் செத்ரிக்கு 150வது சர்வதேச போட்டி என்பதால், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.உலக கோப்பை கால்பந்து தொடர், 2026ல் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் நடக்கவுள்ளன. இதற்கான ஆசிய பிரிவு இரண்டாவது கட்ட தகுதிச் சுற்றில் இந்திய அணி 'ஏ' பிரிவில், குவைத், கத்தார், ஆப்கானிஸ்தானுடன் இடம் பெற்றுள்ளது.புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பெறும் அணி மூன்றாவது கட்ட தகுதிச்சுற்றுக்கு முன்னேறலாம். இதுவரை மோதிய முதல் 3 போட்டியில் தலா ஒரு வெற்றி, ஒரு 'டிரா', தோல்வியுடன் இந்திய அணி 4 புள்ளி பெற்று 3வது இடத்தில் உள்ளது.இன்று இந்திய அணி (117 வது இடம்), மீண்டும் ஆப்கானிஸ்தானை ('நம்பர்-158') சந்திக்கிறது. கடைசியாக மோதிய போட்டியில் தரவரிசையில் மிகவும் பின்தங்கிய ஆப்கானிஸ்தானிடம் 'டிரா' செய்தது ஏமாற்றமாக இருந்தது. இன்று தனது சொந்த மண்ணில் (கவுகாத்தி) இந்தியா பங்கேற்பது கூடுதல் நம்பிக்கை தரலாம். தவிர கேப்டன் சுனில் செத்ரி தனது 150 வது சர்வதேச போட்டியில் பங்கேற்கிறார்.இதில் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவுக்கு வெற்றி பெற்று தந்தால், உலக கோப்பை தகுதியில் இந்தியா முதன் முறையாக மூன்றாவது சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு அதிகரிக்கும். கடைசி 5 போட்டியில் இந்திய வீரர்கள் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இன்று சாதிப்பர் என நம்பலாம்.93சுனில் செத்ரி 39, கடந்த 2005ல் அறிமுகம் ஆனார். 149 போட்டியில் 93 கோல் அடித்துள்ளார். சர்வதேச தொடர்களில் 11 முறை இந்தியாவுக்கு கோப்பை வென்று தந்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை