உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கழுத்தில் துணி இறுகி சிறுமி பலி

கழுத்தில் துணி இறுகி சிறுமி பலி

பெரும்பாக்கம், மேடவாக்கம் அடுத்த பெரும்பாக்கம், எழில்நகர், 128 பிளாக்கை சேர்ந்தவர் உதயா-, சரண்யா தம்பதியர்.நேற்று இருவரும் வேலைக்கு சென்று விட்டு, மாலை வீடு திரும்பிய போது, வீட்டின் கதவு உள் பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. வெகுநேரம் தட்டியும் கதவு திறக்கப்படாததால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.அப்போது, அவர்களின் 8 வயது மகள் அஸ்வந்தி, ஜன்னல் கயிற்றில் கட்டப்பட்டிருந்த திரைச்சீலை கழுத்தில் இறுக்கப்பட்டு மயங்கிய நிலையில் இருந்தார். சிறுமியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றபோது, சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பெரும்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்