உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பிரதமராக மோடி பதவியேற்பு: பா.ஜ.,வினர் கொண்டாட்டம்

பிரதமராக மோடி பதவியேற்பு: பா.ஜ.,வினர் கொண்டாட்டம்

அரூர்: பிரதமர் மோடி, 3வது முறையாக நேற்று பதவியேற்றார். இதையொட்டி, அரூர் பஸ் ஸ்டாண்டில், பா.ஜ., நகர தலைவர் ஜெயக்குமார் தலைமையில், கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். நிர்வாகிகள் முருகன், சுகவனன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதேபோல், மொரப்பூர், கம்பைநல்லுார் பகுதியிலும் பா,ஜ.,வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.* பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்துாரில், பா.ஜ., சார்பில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது.கடத்துார் கிழக்கு ஒன்றியம் இராமியம்பட்டியில் ஒன்றிய தலைவர் சிற்றரசு தலைமையில், மாநில செயற்குழு உறுப்பினர் வரதராஜன், ஒன்றிய மகளிரணி தலைவி சுமதி, முன்னிலையில் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.இதில் நிர்வாகிகள் ஹரி, கோபி பிரபாகரன், சரவணன், கண்ணயன், ஜோதிலிங்கம் ஜெயராமன், ஜெகதீசன் சவுந்தரராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி