மேலும் செய்திகள்
3 பெண்கள் மாயம்
16 hour(s) ago
காந்தி ஜெயந்தி தினத்தன்று இறைச்சி கடைகள் திறப்பு
16 hour(s) ago
என்.எஸ்.எஸ்., சார்பில் கால்நடை சிறப்பு முகாம்
16 hour(s) ago
தர்மபுரி: பாப்பாரப்பட்டி அருகே, மேல் எண்டபட்டியை சேர்ந்த விவசாயி திருவடிவேல், 42; இவர், தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் பயிரிட்டிருந்த சாமந்தி பூக்களை அறுவடை செய்தார். அதை, அவருடைய கோமாகி எலக்ட்ரிக் டூவீலரில் பாப்பாரப்பட்டியில் இருந்து, தர்மபுரி பூ மார்க்கெட்டிற்கு கொண்டு சென்றார். அங்கிருந்து, தர்மபுரி - கிருஷ்ணகிரி சாலையில், ஒரு கி.மீ., துாரம் கடந்து, ராமாக்காள் ஏரி அருகே சென்றபோது, டூவீலரில் தீப்பற்றியது. இதில், திருவடிவேல் தப்பினார். தர்மபுரி தீயணைப்பு மீட்பு துறையினர் வந்து, தண்ணீரை பீய்ச்சியடித்து வாகனத்தில் பற்றிய தீயை அணைத்தனர். அதற்குள் வாகனம் முழுவதும் எரிந்து நாசமானது. தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago