உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிப்பு

பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிப்பு

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு பாலிடெக்னிக் கல்லுா-ரியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க, வரும், 28ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, மாவட்ட கலெக்டர் சதீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில், 2025- 2026ம் கல்வியாண்டில், முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க வரும், 28ம் தேதி வரை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் காலநீட்டிப்பு செய்துள்ளது. இக்கல்லுாரியில், முதலாமாண்டில், அமைப்பியல் துறையில், 17 இடங்கள், இயந்திரவியல் துறையில், 16, மின்னியல் (ம) மிண்-ணணுவியல் துறையில், 24, மிண்ணணுவியல் (ம) தொடர்பியல் துறையில், 39, இயந்திரவியல் (கருவி மற்றும் அச்சு) துறையில், 15, என, மொத்தம், 111 காலியிடங்கள் உள்ளன.எனவே, டிப்ளமோ வகுப்பில் சேர தகுதியுள்ள, 10ம் வகுப்பு தேர்ச்சி, பிளஸ் 1 இடைநின்றவர், பிளஸ் 2 தோல்விய-டைந்தோர் ஆகிய கல்வித்தகுதி உடையவர்கள் இக்கல்லுாரியில் நேரடியாக முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு விருப்பமான துறைக்கு விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை