உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஆடு திருடிய 2 பேருக்கு காப்பு

ஆடு திருடிய 2 பேருக்கு காப்பு

கம்பைநல்லுார்: தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் அடுத்த ஆல்ரப்பட்டியை சேர்ந்தவர் சந்திரசேகர், 35; கூலித்தொழிலாளி. இவர், 5 ஆடுகளை வளர்த்து வந்தார். கடந்த, 16ல் மாலை ஆடுகளை தன் வீட்டின் முன் கட்டி வைத்துவிட்டு துாங்கியுள்ளார். அடுத்த நாள் அதிகாலை, 5:00 மணிக்கு வீட்டிற்கு வெளியில் வந்து பார்த்தபோது, 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 2 ஆடுகளை காணவில்லை. இது குறித்து சந்திரசேகர் அளித்த புகார்படி கம்பைநல்லுார் போலீசார் வழக்குப்பதிந்து குண்டல்பட்டியை சேர்ந்த, 17 வயது சிறுவன் மற்றும் வீரமணி, 33, ஆகிய இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை