உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காங்கேயத்தில் அமைதி பேரணி

காங்கேயத்தில் அமைதி பேரணி

காங்கேயம், திருப்பூர் மாவட்டம், காங்கேயம் தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அமைதி பேரணி நடந்தது. தாராபுரம் சாலை சி.எஸ்.ஐ., தேவாலயம் முன் துவங்கிய அமைதி பேரணி, பஸ் ஸ்டாண்ட் வரை சென்றது. காங்கேயம் நகர தி.மு.க., செயலர் சேமலையப்பன் தலைமை வகித்தார். பேரணி முடிவில் கருணாநிதி திருவுருப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் துாவி மரியாதை செலுத்தினர். தலைமை பொதுக்குழு உறுப்பினர் கார்த்திகேயன், காங்கேயம் தெற்கு ஒன்றிய செயலர் சிவானந்தன், வடக்கு ஒன்றிய செயலர் கருணைபிரகாஷ் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை