உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோட்டில் டாக்டர் வீட்டில் 75 பவுன், ரூ.50 ஆயிரம் திருட்டு

ஈரோட்டில் டாக்டர் வீட்டில் 75 பவுன், ரூ.50 ஆயிரம் திருட்டு

ஈரோடு, ஈரோட்டில், ஹோமியோபதி டாக்டர் வீட்டில், 75 பவுன் நகை, 50 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.ஈரோடு, சஞ்சய் நகர் ராணி வீதியை சேர்ந்த பிரபாத் மனைவி ராணி சுப்ரியா, 42. இவர் கோவையில் ஹோமியோபதி டாக்டராக பணிபுரிகிறார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவரது தந்தை பழனிசாமி பல் டாக்டராக உள்ளார். சென்னையில் வசிக்கும் பழனிசாமியின் மகன் சந்தோஷ்குமார் இல்ல பூப்பு நன்னீராட்டு விழாவுக்கு கடந்த, 30 காலை சென்னைக்கு சென்றுள்ளனர். நேற்று மதியம், ராணி சுப்ரியா வீட்டு வேலைக்கார பெண் வந்த போது, வீட்டின் கிரில் கேட் உடைக்கப்பட்டு இருந்து கண்டு அதிர்ச்சியடைந்து தகவல் தெரிவித்தார். புகார்படி, வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். கிரில் கேட் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், பீரோவில் இருந்த, 75 பவுன் நகை, 50 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை திருடி சென்றது தெரியவந்துள்ளது. கைரேகை நிபுணர்கள், அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். ராணி சுப்ரியா வீட்டில், 'சிசிடிவி' கண்காணிப்பு கேமரா இல்லை. எனவே, எதிரே உள்ள கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை