உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நில பிரச்னையில் தவறான குற்றச்சாட்டு பஞ்., கவுன்சிலர் மனு

நில பிரச்னையில் தவறான குற்றச்சாட்டு பஞ்., கவுன்சிலர் மனு

ஈரோடு:ஈரோடு மாவட்டம், பெருந்துறை டவுன் பஞ்., 2வது வார்டு கவுன்சிலர் பஷிரியா பேகம் - காங்., தெற்கு மாவட்ட காங்., தலைவர் மக்கள்ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ., பழனிசாமி உட்பட நுாற்றுக்கும் மேற்பட்டோருடன், கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் முகமது குதுரத்துல்லாவிடம் மனு வழங்கினர்.இது குறித்து கவுன்சிலர் கூறியதாவது:பெருந்துறை பேரூராட்சியின் எட்டாவது வார்டு பகுதியில், செங்குந்தர் சமுதாயத்துக்கான பாவடி நிலத்தை நான் அபகரிப்பதாக, சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர். இரு தினங்களுக்கு முன் கலெக்டர் அலுவலகத்திலும் மனு கொடுத்துள்ளனர்.அவ்வாறு நான் ஈடுபடாத நிலையில், என் மீது தவறாக குற்றம் சாட்டுகின்றனர். மாவட்ட நிர்வாகம் விசாரித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி