உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சந்தனக்காப்பு அலங்காரத்தில் ஜொலித்த பாரியூர் கொண்டத்து காளியம்மன்

சந்தனக்காப்பு அலங்காரத்தில் ஜொலித்த பாரியூர் கொண்டத்து காளியம்மன்

கோபி: கோபி அருகே பாரியூரில் பிரசித்தி பெற்ற கொண்டத்துக்காளியம்மன் கோவிலில், நடப்பாண்டு குண்டம் தேர்த்திருவிழாவில், தீ மிதி விழா நாளை மறுதினம் நடக்கிறது. இந்நிலையில் விழா முக்கிய நிகழ்வான சந்தனக்காப்பு அலங்காரம் நேற்று நடந்தது. இதையொட்டி மூலவர் அம்மனுக்கு, இளநீர், பால், தயிர், கரும்புபால் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து, 12 ஆயிரம் வாழைப்பழம், 350 கிலோ நாட்டு சர்க்கரை, பேரீச்சம்பழம், திராட்சை, கற்கண்டால் தயாரிக்கப்பட்ட இரண்டு டன் பஞ்சாமிர்தத்தால், சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், மூன்று கிலோ சந்தனத்தை கொண்டு, மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை