உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சின்ன வெங்காயம் களை எடுக்கும் பணி தீவிரம்

சின்ன வெங்காயம் களை எடுக்கும் பணி தீவிரம்

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், சின்ன வெங்காயம் களை எடுக்கும் பணியில் விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த வயலுார், சிவாயம், பாப்பகாப்பட்டி, கருப்பத்துார், சிந்தலவாடி ஆகிய பகுதிகளில் விவசாயிகள், வெங்காயம் சாகுபடி செய்துள்ளனர். இதற்கு தேவையான தண்ணீர் கிணற்று நீர் பாசன முறையில் பாய்ச்சப்படுகிறது. நடவு செய்யப்பட்ட சின்னவெங்காயம் பயிர்கள் வளர்ந்து வருகிறது. இதன் நடுவில் அதிகமான களைகள் முளைத்து வருவதால், சின்ன வெங்காயம் வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. இதையடுத்து, பயிர்கள் செழிப்பாக வளர்ந்து வரும் வகையில் விவசாய தொழிலாளர்கள் மூலம் களைகள் அகற்றும் பணி துரிதமாக நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை