உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ராமர் பாண்டி கொலை வழக்கு அரவக்குறிச்சி கோர்ட்டில் 5 பேர் ஆஜர்

ராமர் பாண்டி கொலை வழக்கு அரவக்குறிச்சி கோர்ட்டில் 5 பேர் ஆஜர்

அரவக்குறிச்சி;ராமர் பாண்டி வெட்டி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட, 5 பேரை அரவக்குறிச்சி நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.மதுரை அனுப்பானடியை சேர்ந்தவர் ராமர் பாண்டி, 33. இவர் கடந்த, 2012ல் பெட்ரோல் குண்டு வீசியதில், 7 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் ராமர் பாண்டி உட்பட, 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு, கரூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.கடந்த, 19ல் கரூர் நீதிமன்றத்தில் ஆஜரான ராமர் பாண்டி, டூவீலரில் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, அரவக்குறிச்சி அருகே, தடாகோவிலில் ராமர் பாண்டியை வழிமறித்த நபர்கள், சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இந்த வழக்கில் தேடிவந்த, மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த வினோத் கண்ணன், 26, கீரனுார் மகேஷ் குமார், 24, மேலுார் தனுஷ், 21, ஆண்டாள் கொட்டாரம் தர்மா, 25, ரமேஷ், 23, ஆகிய, 5 பேரும் முதுகுளத்துாரில் சரணடைந்தனர். அவர்களை நேற்றிரவு, 8:00 மணிக்கு, அரவக்குறிச்சி நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை