உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / டிரான்ஸ்பார்மரில் காப்பர் கம்பி திருட்டு

டிரான்ஸ்பார்மரில் காப்பர் கம்பி திருட்டு

ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே சின்ன-பென்னங்கூர் பகுதியில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மரில், நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் மின்தடை ஏற்படுத்தி, அதை உடைத்து அதற்குள் இருந்த, 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காப்பர் கம்பிகள் மற்றும் ஆயிலை திருடி சென்றனர். தேன்கனிக்கோட்டை தாலுகாவில், அடுத்தடுத்து டிரான்ஸ்பார்-மரை உடைத்து திருடும் சம்பவம் அதிகரித்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும், 7 டிரான்ஸ்பார்மர்களில் திருட்டு நடந்துள்-ளது. இச்சம்பவம் தொடர்பாக, தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்