நாமக்கல்:கார்த்திகை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி, நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்-பட்டது. நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஒரே கல்லில், 18 அடி உயரத்தில் உரு-வான ஆஞ்சநேயர் சுவாமி, நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்-பாலிக்கிறார். இங்கு, ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை, ஆஞ்சநேயர் ஜெயந்தி, தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, அமா-வாசை, பவுர்ணமி, ஏகாதசி உள்ளிட்ட நாட்களில் ஆஞ்சநேய-ருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜை நடத்தப்-படும்.அதன்படி, கார்த்திகை முதல் ஞாயிற்றுக்கிழமையான, நேற்று காலை, 10:00 மணிக்கு சுவாமிக்கு வடை மாலை அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, 11:00 மணிக்கு நல்லெண்ணெய், சீயக்காய், பால், தயிர், மஞ்சள், சந்தனம் போன்றவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மதி யம், 1:00 மணிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்-டது. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.