| ADDED : மார் 25, 2024 06:03 AM
போடி : லோக்சபா தேர்தலை முன்னிட்டு நூறு சதவீதம் ஓட்டுப்பதிவு செய்யவும், வாக்காளர்கள் அச்சம் இன்றி ஓட்டளிப்பதை உறுதி செய்யும் வகையில் போடியில் போலீசாரின் கொடி அணி வகுப்பு ஊர்வலம் நடந்தது. ஊர்வலம் போஜன் பார்க்கில் துவங்கி, சர்ச் ரோடு, எஸ்.எஸ்.புரம், பழைய பஸ் ஸ்டாண்ட், பி.ஹைச்., ரோடு, காமராஜ் பஜார் வழியாக தாலுகா போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றனர்.போடி டவுன் இன்ஸ்பெக்டர் கோபி, தாலுகா இன்ஸ்பெக்டர் சரவணன், அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் விக்டோரியா லூர்தி மேரி, சின்னமனூர் இன்ஸ்பெக்டர் பாலாண்டி, மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், ஆயுதப்படை போலீசார், போடி உட்கோட்டத்திற்கு உட்பட்ட எஸ்.ஐ.,க்கள் உட்பட போலீசார் 100 பேர் கலந்து கொண்டனர்.